கொரோனா அச்சத்தால் உணவு, தவிர்ப்பில் சிறைச்சாலை கைதிகள்
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் கொரோனா அச்சம் காரணமாக தம்மை பிணையில் விடுவிக்க வேண்டும் என கோரி உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகின்றது.
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக தம்மை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பிணையில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
எனினும் சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து சிறைச்சாலை வளாகத்தில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment