Header Ads



ராஜபக்‌ஷர்களின் தேவைகளை நிறைவேற்ற ரணில் முயற்சி - மனுஷ

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க ராஜபக்‌ஷர்களின் தாலம்த்துக்கு ஆடுகிறார் எனச் சாடும், முன்னாள் எம்.பி.மனுஷ நாணயக்கார, அவர் ராஜபக்‌ஷ தேவைகளை நிறைவேற்ற முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

ஜாதிக சமஹி பலவேகய அமைப்பின் கீழ் இணைந்து போட்டியிடும் இயலுமை இருக்கும்​போது ஐ.தே.க தனித்து போட்டியிட முற்படுவது ராஜபக்‌ஷர்களுக்கு சாதமாக அமையுமெனவும் தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும், ஐ.தே.கவின் செயற்குழுவின் முழுமையாக ஆதரவு எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும், முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தலைமையில் போட்டியிட வேண்டும் என்பதாகவே இருந்தது என்றார். 

இவ்வாறிருக்க தற்போது ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனித்து மேற்கொள்ளும் தீர்மானங்கள் ராஜபக்‌ஷர்களுக்கு அடுத்த தேர்தலில் 113 ஆசனங்களை இலகுவாக பெற்றுகொள்ள வழி செய்யும் என்றும் சாடினார்.

No comments

Powered by Blogger.