Header Ads



கொரோனா தொற்றியவர்கள் போன்று, அமைச்சர்கள் வீடுகளில் இருப்புதாக குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் சரியான முறையில் பங்களிப்பு செய்வதில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டினை முருத்தெட்டுவே ஆனந்த தேரர் சுமத்தியுள்ளார்.

நாராஹேன்பிட்டி அபயராம விகாரையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

ஊடக கண்காட்சிகளை நடத்துவதன் மூலம் மாத்திரம் கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொரோனாவை கட்டுப்படுத்த எப்படியான முயற்சிகளை மேற்கொண்டாலும் அவரது அமைச்சர்கள் கொரோனா தொற்றியவர்கள் போன்று எதனையும் தேடி பார்க்காமல் வீடுகளில் இருக்கின்றனர் என ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.