எனது மகனும் தடுப்பு, முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்
ஐக்கிய இராஜ்ஜியத்தில் இருந்து வந்த தன்னுடைய மகனுக்கு, அரசாங்கம் விசேட சலுகை வழங்கியுள்ளதாக சமூல வலைதளங்களில் வெளியாகிவரும் செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்த போக்குவரத்து சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர, தன்னுடைய மகனும், சாதாரண மக்களைப் போன்றே, தியத்தலாவ தடுப்பு முகாமிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் கூறினார்.
இது தொடர்பாக நேற்று (19) அவரிடம் வினவியபோது, தன்னுடைய மகனுக்கு அரசாங்கத்தால் சிறப்பு சலுகை வழங்கவேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.
“என்னுடைய மகன், ஐக்கிய இராஜ்ஜியத்தில் இருந்து, சிறப்பு விமானமொன்றில் இலங்கைக்கு வந்து, தடுப்பு முகாமில் சிறப்பு சலுகைகளைப் பெற்று வருகின்றார் என்று, பல சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதை நான் கண்டேன். அவை அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை” என்று அவர் கூறினார்.
தன்னுடைய மகன், எமிரேட்ஸ் விமானம் மூலமே இலங்கைக்கு வந்ததாகவும் இலங்கைக்கு வருவோரை தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லும் சாதாரண பஸ்ஸிலேயே மற்றையவர்களுடன் இணைந்து, அவரும் தடுப்பு முகாமுக்குச் சென்றார் என்றும் அவர் கூறினார்.
Post a Comment