Header Ads



‘சுயநலமாகவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது’

பதவிக்காலம் நிறைவடைவதற்கு இன்னும் 6 மாதங்கள் இருந்தும், கொரோனா வைரஸ் தொற்று அச்சம் குறித்து தெரிந்திருந்தும், அதன் பாதிப்புகள் தொடர்பில் இந்த அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவில்லையெனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பி​ரேமதாஸ, சுயநலமாகவே நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கலைத்தார் என்றார்.

“மக்களின் உயிர் மீது அக்கறையின்றி, மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறுவதிலேயே குறியாக இருக்கின்றனர். மக்கள் வாழ்ந்தாலும் இறந்தாலும் அது அவர்களுக்கு ஒரு​ பொருட்டல்ல” என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தில், இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் ​மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.