தனிமைப்படுத்தலுக்கு முழு ஆதரவு வழங்குக, அது தங்கள் குடும்பங்களுக்கு கொரோனா பரவுவதனை கட்டுப்படுத்த உதவும்
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று வைத்தியசாலையில் மேலும் மூன்று பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டு மிக மோசமான முறையில் செயற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் தற்போது கொழும்பு வைத்தியசாலையிலும் மற்றைய நபர் பொலநறுவை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜேர்மன் நாட்டிற்கு சென்று நாடு திரும்பியவர் என குறிப்பிடப்படுகின்றது.
இதன் காரணமாக தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு முழுமையான ஆதரவு வழங்குமாறும், அது தங்கள் குடும்பங்களுக்கும் நாடு முழுவதும் வைரஸ் பரவுவதனை கட்டுப்படுத்துவதற்காகவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது வரையில் கொரோனா தொற்றுக்குள்ளான 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment