Header Ads



டெல்லி வன்முறை - வடிகாலில் இருந்து மீட்கப்படும் ஜனாசாக்கள்


உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட்டைச் சேர்ந்த 25 வயதான ஹாபிழ் ஹம்சா 

டெல்லியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து தொழில் செய்து வந்தார் . 

டெல்லி தாக்குதல் நடந்து 2 நாட்களுக்குப் பிறகு தனது கடையை உடைத்திருப்பார்களோ என்ற பதட்டத்துடன் கடையைப் பார்க்கச் சென்றவர் வீடு திரும்பவில்லை. 

ஹம்சாவைக் காணவில்லை என்று அவரது உறவினர்கள் பதட்டத்துடன் தேடினர். 

வியாழக்கிழமை -05- அவரது உடல் டீல்பூரின் நாலா பகுதியில் உள்ள ஒரு வடிகாலில் இருந்து மீட்கப்பட்டது. 

ஹம்ஸாவின் உடல் மீட்கப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

ஹம்சாவின் உடலை உறவினர்கள் மீரட்டிற்கு கொண்டு செல்கின்றனர். 

விரைவில் திருமணம் செய்ய இருந்தார் ஹம்சா. 

மீரட்டைச் சேர்ந்த உறவின பத்ர் அலி, ஹம்ஸாவின் மரணத்தைப் பற்றி வருத்தத்துடன் "இந்த மரணம் பற்றிய செய்தி துயரமானது. ஹம்ஸா வருமானத்தை ஈட்டுவதற்காக டெல்லிக்குச் சென்றார். 

இப்போது அவர் ஒரு கபனை அணிந்து திரும்பி வருகிறார். 

என்று சொல்லி கண்ணீர் விட்டார். 

டெல்லியில் படுபயங்கரமான கொலைவெறி ஆட்டம் ஆடிய பாஜக பயங்கரவாதிகள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் கொன்று குவித்திருக்கிறார்கள். அந்தக் கயவர்களின் அழிவிற்கு துஆ செய்வோம்.

No comments

Powered by Blogger.