Header Ads



கண்ணுக்குப் புலப்படாத சக்திகளுடன் போர், கடவுளின் விருப்பத்தின்படி இந்த நெருக்கடி முடிவுக்கு வரும்

கண்ணுக்குப் புலப்படாத சக்திகளுடன் மலேசியா அரசு போரிட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், உலக வரலாற்றில் முன்னெப்போதும் நிகழ்ந்திராத ஒரு நிகழ்வு இது எனத் தெரிவித்துள்ளார்.

"தற்போது நாட்டில் அமைந்திருப்பது புதிய அரசாங்கம். இது மக்களால் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமாக இல்லாமல் போகலாம். எனினும் மக்கள் மீது இந்த அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறேன்.

"சிறப்பான ஒரு தருணத்தில் நான் இந்த நாட்டின் பிரதமராக பொறுப்பேற்கவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். அரசியல், உடல்நலம், பொருளாதாரம் என ஒரே சமயத்தில் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளேன்.

"எனவே மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், சீக்கியர்கள் பழங்குடியின மக்கள் என யாராக இருப்பினும், தயவு கூர்ந்து என்னையும் எனது அமைச்சரவை சகாக்களையும் அரசாங்கத்தையும் தற்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்காக பொருத்தருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

"தற்போது நாங்கள் மிகக் கச்சிதமாக செயல்படுவதாகக் கூறுவதற்கில்லை. ஆனால், நடப்பு நெருக்கடியிலிருந்து நாட்டை வெளியே கொண்டு வருவதற்கு எங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருகிறோம். கடவுளின் விருப்பத்தின்படி இந்த நெருக்கடி முடிவுக்கு வரும்போது நாம் முன்பைவிட அதிக சக்தியுடன் உருப்பெறுவோம் என நம்புகிறேன்," எனப் பிரதமர் மொகிதின் யாசின் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.