Header Ads



வெள்ளரிப்பழம் அதிகளவு விற்பனை


(எம்.என்.எம்.அப்ராஸ்)

தற்போதைய நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலைக் காரணமாக அம்பாரை மாவட்டத்தில் வெள்ளரிப்பழம் அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.   

இதற்கமைய கல்முனை ,சாய்ந்தமருது பாண்டிருப்பு ,காரைதீவு ,மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய பகுதிகளில் பிரதான வீதிகளில் வெள்ளரிப்பழத்தினை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர் 

இதனை பொது மக்கள் ஆர்வத்துடன் கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

ஒரு வெள்ளரி பழம் 100 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் இவ் வகை பழங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவில் செய்கை பண்ணப்பட்டு வருகின்றமை குறிப்பிட்டத்தக்கது.




1 comment:

  1. கல்முனைக்குடியிலும் விற்கப்படுகிறது

    ReplyDelete

Powered by Blogger.