Header Ads



வீட்டினுள்ளேயே இருக்குமாறும், பயன்படுத்திய முகக்கவசங்களை எரித்துவிடுமாறும் அறிவித்தல்


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக அனைத்து மக்களுக்களையும் மிகுந்த பாதுகாப்போடு வீட்டினுள்ளேயே இருக்குமாறு அரசாங்கத்தால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 கொரோனா தொற்றுக்கு மத்தியில் தற்போது வீடுகளில் சேரும் கழிவுப்பொருட்களை அகற்றுவதில் கூடுதலான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதோடு, பொது மக்களுக்கு கோரிக்கை விடுப்பதாக மேல் மாகாண கழிவுப்பொருள் முகாமைத்துவ அதிகார சபை தெரிவித்துள்ளது.

தற்போது பயன்படுத்தப்படும் முகக்கவசங்கள் போன்ற பொருட்களை முடிந்தவரை எரித்துவிடுமாறு மேல் மாகாண கழிவுப்பொருள் முகாமைத்துவ அதிகார சபையின் பணிப்பாளர் நளின் மானப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் கழிவுப்பொருட்களை அகற்றுவதிலும் உள்ளூராட்சி மன்றங்கள் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன. இதுதொடர்பிலும் பொது மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் முகாமைத்துவ அதிகார சபையின் பணிப்பாளர் நளின் மானப்பெரும மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

No comments

Powered by Blogger.