Header Ads



கொரோனா வைரஸினால், பாதிக்கப்பட்டவரின் மனக்குமுறல்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் தனது மனநிலை தொடர்பில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தான் மற்றும் தனது குடும்ப உறுப்பினர்களை எயிட்ஸ் நோயாளிகளை போன்று பார்க்க வேண்டாம் என கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியரான பிரசன்ன தம்மிக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில்,

“எனது மனதில் எந்த கவலையும் இல்லை. நாட்டுக்காவும் விமான நிலையத்திற்காகவும், விமான நிறுவனத்திற்காகவும் உயிரை இரண்டாவதாக நினைத்து கடமை மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றினேன்... எனினும் இன்று.... விமான நிலையத்தில் இருந்து கொண்டு வந்தது ஒன்றும் இல்லையா என கேட்டவர்கள், எனது வீட்டில் உள்ளவர்களின் குறைகளை கூட யாரும் கேட்பதில்லை. பரவாயில்லை. HIV தொற்றுக்குள்ளானதை போன்று என்னையும், எனது குடும்பத்தினரையும் பார்க்க வேண்டாம் என்பதே எனது ஒரு கோரிக்கையாகும். எங்கள் மன நிலை எங்களுக்கு மாத்திரமே புரியும். இந்த நிலைமை உங்களுக்கு ஏற்படும் வரை உங்களுக்கு புரியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


1 comment:

Powered by Blogger.