கடந்த அரசாங்கத்தின் காலத்தில், மக்களே கஷ்டங்களுக்கு உள்ளானர் - மகிந்த
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் சிலர் பருந்துகளாக மாற முயற்சித்த காரணத்தினால் மக்களே கஷ்டங்களுக்கு உள்ளானதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குருணாகலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி, பிரதமருக்கு இசைவாக நடக்கவில்லை. பிரதமர் ஜனாதிபதிக்கு இசைவாக நடக்கவில்லை. இதனால், நாட்டுக்கு சேவைகள் நடக்கவில்லை எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment