தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய சஜித், கம்பஹாவில் ரஞ்சன் போட்டி
குரல் பதிவுகள் தொடர்பான சம்பவம் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த சிலர் தன்னை விமர்சித்திருந்தாலும தற்போது அவர்கள் தன்னுடன் நன்றாக பேசுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
குரல் பதிவுகள் காரணமாக மக்கள் தன்னை நிராகரிப்பார்கள் என பலர் நினைத்தாலும் இந்த சம்பவத்தின் பின்னர் தனது பிரபலம் மேலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இம்முறை பொதுத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட எண்ணியிருந்த போதிலும் தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வழங்க சஜித் பிரேமதாச விருப்பம் வெளியிட்டுள்ளதால், கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாகவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவை கட்சியில் இருந்து நீக்கி, அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை நடத்த உள்ளதாக குரல் பதிவு சம்பவம் சம்பந்தமாக ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்ட பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.
எனினும் அப்படியான ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment