Header Ads



கொரோ­னா ­தொடர்பில், ஆதா­ர­மற்ற தக­வல்­களை நம்பவேண்டாம்

 கொரோ­னா ­வைரஸ் தொற்று தொடர்பில்  முகநூல் உட்­பட சமூக வலைத்தளங்­களில் தெரி­விக்­கப்­படும் ஆதா­ர­மற்ற தக­வல்­களை நம்பவேண்டாம் என சுகா­தார மற்றும் வைத்தியத்­து­றை­யினர் தெரி­விக்­கின்­றனர்.

இரத்­தி­ன­புரி போதனா வைத்­தியசாலை உட்­பட இம்­மா­வட்­டத்தின் பல வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் கொரோனா தொற்று நோய் தொடர்­பாக பல தகவல்கள் சமூக வலைத்தளங்­களில் பரவி வரு­கின்றன. இது குறித்து இரத்­தி­ன­புரி போதனா வைத்தி­ய­சாலை மற்றும் இரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் அரச வைத்­தி­ய­சாலை நிர்­வா­கங்­க­ளிடம் வின­விய போதே அவர்­கள்­ இவ்­வாறு தெரி­வித்­தனர்.

குறித்த வைத்­தி­ய­சா­லை­களில் கொரோ­னா­ தொற்­றுக்­குள்­ளான  நோயா­ளர்­கள்­ எ­வரும் இல்லை எனவும் சமூகவலைத் தளங்­களில் தெரி­விக்­கப்­படும் ஆதா­ர­மற்ற தகவல்களை  பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் இந்நிர்வாகங்கள் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளன.

No comments

Powered by Blogger.