Header Ads



பொதுஜன பெரமுனவில் மாத்திரமே போட்டியிடுவேன் , சுயேட்சையில் அல்ல - மர்ஜான் பளீல் ஹாஜியார்

எதிர்வரும் தேர்தலில் போட்டியடுமாறு பிரதமர் மகிந்த என்னிடம் நேரடியாக சொல்லி விட்டார். 

அந்தவகையில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால், பொதுஜன பெரமுனவில் மாத்திரமே போட்டியடுவேன் சுயேற்சையல் அல்ல என   பேருவளைத் தொகுதி அரசியல் பிரமுகர் மர்ஜான் பளீல் ஹாஜியார் தெரிவித்தார்.

பேருவளைத் தொகுதி என்பது முஸ்லிம் - சிங்கள மக்கள் வாழும் பகுதி. ஒற்றுமையே இங்கு பிரதானமானது. எனவே பொதுஜன பெரமுனவில் மாத்திமே போட்டியிடுவேன். சுயேற்சையாக அல்ல.

முஸ்லிம்கள் மாத்திரம் உள்ளடக்கி சுயேற்சையாக போட்டியிடுவது, சிங்கள மக்களுடனான ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தலாம். 

இன்றைய இலங்கை முஸ்லிம் - சிங்கள ஒற்றுமையை வேண்டி நிற்கிறது, எனவேதான் நான் ஒற்றுமையை வலியுறுத்துகிறேன் என்றார்

No comments

Powered by Blogger.