Header Ads



இந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதை நிறுத்தக்கோரி ஜனாதிபதிக்கு கடிதம்


இந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதும் இந்துத் தெய்வங்களின் பெயரில் உள்ள வீதிகளை கிறிஸ்தவ மற்றும் பொதுப் பெயர்களாக மாற்றுவதை நிறுத்தக்கோரி இந்து சமய அதியுயர் குருபீடங்கள் அது உயர் நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி, பிரதமர் ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கு கடிதம் மூலம் கோரிக்கைவிடுத்துள்ளது.

குறித்த கடிதத்தில்,

இலங்கைத் தீவின் வடபகுதியில் குறிப்பாக கரையோரப் பிரதேசங்களில் இந்துக்களை கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யும் செயற்பாடுகளும், இந்துப் பிரதேசங்களில் கிறிஸ்தவ சிலைகளை நிறுவும் செயற்பாடுகளும் இந்துக்களின் பூர்வீகப் பிரதேசங்களை இந்துக்கள் அல்லாத பிரதேசங்களாக பெயர் மாற்றம் செய்யும் செயற்பாடுகளும் இந்து ஆலயங்களுக்கும் திருவுருவங்களுக்கும் சேதம் விளைவிக்கும் செயற்பாடுகளுக்கும் ஒரு பகுதி கிறிஸ்தவ பாதிரிமார்களாலும் அவர்கள் சார்ந்த திருச்சபைகளினாலும் அவர்கள் சார்ந்தவர்களாலும் மிக மோசமாக முன்னெடுக்கப்பட்டு வருவது ஆழ்ந்த வேதனைக்குரியதாகும்.

 அவை வடபகுதியில் இந்து கிறிஸ்தவ நட்புறவையும் நல்லிணக்கத்தையும் மிக மோசமாக பாதிக்கும் செயல்கள் ஆகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இக்கடிதத்தில் அனைத்து இந்து குருபீடங்களும் நிறுவனங்களும் இணைந்து ஒப்பமிட்டு இக் கடிதத்தினை அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.