வைரஸ் கண்காணிப்பு நிலையங்கள் தொடர்பில், மக்கள் அச்சமடைய தேவையில்லை
கொவிட் - 19 வைரஸ் நாட்டுக்குள் பரவுவதை தடுப்பதாக அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு நிலையங்கள் தொடர்பில் மக்கள் அச்சமடைய தேவையில்லை என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வைரஸ் பரவுவதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
Post a Comment