Header Ads



மற்றவர்களின் பாவத்தை சுமக்கும் தேவை எனக்கில்லை - கரு ஜயசூரிய

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு கரு ஜயசூரியவுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவது சம்பந்தமாக தனக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு சம்பந்தமாக தனது நெருக்கமானவர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள கரு ஜயசூரிய, மற்றவர்களின் பாவத்தை சுமக்கும் தேவை தனக்கில்லை என நேற்றில் இருந்து கூறி வருகிறார்.

No comments

Powered by Blogger.