ஜனாஸாவாக அடக்கம் செய்யப்பட்டவர், மறுநாள் வீட்டுக்குவந்த அதிசயம் - நடந்தது என்ன?
உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்ட ஒருவர் நல்லடக்கம் செய்யப்பட்ட பின் மறுநாள் வீட்டுக்கு திரும்பி வந்த சம்பவம் புத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த நபர் திரும்பி வந்ததால் அடக்கம் செய்யப்பட்டவர் யார் என்பதைக் கண்டறிவதற்கு அடக்கம் செய்யப்பட்டதாக கருதப்படும் ஜனாஸாவை அகழ்ந்தெடுக்கும் பணிகள் நேற்று புதன்கிழமை 11 காலை புத்தளம் வெட்டுக்குளம் மைய வாடியில் இடம்பெற்றது.
புத்தளம் மாவட்ட நீதிவான், புத்தளம் மற்றும் கற்பிட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம். ஹிஷாம், புத்தளம் பொலிஸார் மற்றும் தள வைத்தியசாலை அதிகாரிகள் முன்னிலையில் இந்த அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.
இதன்போது குறித்த பிரதேசத்துக்குள் ஊடகவியலாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை.
அகழ்ந்தெடுக்கப்பட்ட சடலம் மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
புத்தளம் மற்றும் கல்பிட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம். ஹிஷாம் இது தொடர்பாக தெரிவிக்கையில்,
கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் திகதி புத்தளத்தில் உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட சடலம் ஒன்றை அவரது குடும்பத்தினராக கருதப்படுபவர்கள் இனங்காட்டியதையடுத்து ஜனவரி மாதம் 30 ஆம் திகதி சடலம் புத்தளம் வெட்டுக்குளம் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஆனால், நல்லடக்கம் செய்யப்பட்டதாக கருதப்பட்டவர் மறுநாள் உயிருடன் காணப்பட்டதையடுத்து நல்லடக்கம் செய்யப்பட்டவர் யார் என்பதை இனங்காணும் பொருட்டே குறித்த சடலம் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Post a Comment