Header Ads



நாட்டை முடக்க தீர்மானிக்கவில்லை - பவித்ரா


நாட்டை முடக்குவதற்கான தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிக்கின்றார்.

நாடு முடக்கப்படும் பட்சத்தில் மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாள் கூலிக்கு பணியாற்றும் பலரே நாட்டில் உள்ளதாகவும், நாடு முடக்கப்படும் பட்சத்தில் அவர்கள் பாரிய பொருளாதார பிரச்சனைகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் கூறினார்.

குறிப்பாக புத்தளம் பகுதியிலேயே அதிகளவில் இத்தாலியிலிருந்து வருகைத் தந்தவர்கள் இருக்கின்றார்கள் எனவும், அவ்வாறு வருகைத் தந்தவர்கள் அதிகளவில் வாழும் பகுதிகள் தொடர்பில் எதிர்வரும் தினங்களில் தீர்மானமொன்று எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பின் போது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2 comments:

  1. Why don't you use Chilaw instead saying Puthtalam blindly (District)
    "CHILAW'

    ReplyDelete

Powered by Blogger.