Header Ads



கொழும்பில் சஜித் அணியில், போட்டியிடும் வயது முதிர்ந்த வேட்பாளர்

1937 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம், 13 ஆம் திகதி பிறந்த பௌசி, இம்முறை கொழும்பு மாவட்டத்தில் தனது 83 வயதில் தேர்தலில் களம் குதித்துள்ளார்.

பொதுத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் தினமான நேற்று 19 பிரதான கட்சிகள் கொழும்பு மாவட்டத்திற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில்  தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் ஆகக் கூடிய வயதுடைய நபர் முன்னாள் அமைச்சர் பௌசி என கூறப்படுகிறது.

83 வயதான முன்னாள் அமைச்சர் பௌசி கடந்த ஐம்பத்து இரண்டு நாள் அரசாங்க காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்ட அதேவேளை, அண்மையில் சஜித் அணியில் இணைந்தார்.

இம்முறை தேசியப் பட்டியலில் அவர் பாராளுமன்றம் செல்ல வாய்ப்பு வழங்குவதாக சஜித் பிரேமதாசா கூறியுள்ளார்.

எனினும் வேட்புமனு தாக்கல் செய்ய சில மணித்தியாலங்கள் இருந்த நிலையில் தாம் தேர்தலில் போட்டியிட வேண்டுமென வலியுறுத்தி வாதிட்டு வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

இதன்மூலம் கொழும்பு மாவட்டத்தில் சஜித் அணியில் 3 முஸ்லிம்கள்  போடியிடும் அதேவேளை அவர்களில் மிகவும் வயது கூடியவர் பௌஸி என்பது விஷேட அம்சமாகும்.

கொழும்பு மாவட்டத்தில்  சஜித் அணியில் போட்டியிடும் மரிக்காருருக்கு 43 வயது என்பதுடன்,   முஜிபுர் ரஹமானுக்கு 50 வயது என்பதும் குறிப்பிட்டத்தக்கது.

அத்துடன் ஐதேக யின் ரணில் அணியில் 2 முஸ்லிம்கள் போட்டியிடுகின்றமையும், இங்கு கவனிக்கத் தக்கது.

No comments

Powered by Blogger.