புகையிரத நிலையங்களில் டிக்கட், கொடுக்க எவரும் இல்லை
புகையிரத பயணசீட்டினை விநியோகிப்பதை தற்காலிகமாக இடைநிறுத்த புகையிரத நிலைய அதிபர்களின் சங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பிலான கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
புகையிரத பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொதி சேவையை இடைநிறுத்தியுள்ள நிலைய அதிபர்களின் சங்கம் பயணசீட்டுக்களை் விநியோகிப்பதையும் இடைநிறுத்தியுள்ளன.
பயணசீட்டுக்களை விநியோகிக்கும் நபர்களுக்கு முகத்தை மூடுவதற்கான கவசமும் கையுறையினை பெற்றுக்கொடுக்க புகையிரத திணைக்கள கட்டுபாட்டு பிரிவு நடவடிக்கை மேற்கொள்ளாமையே புகையிரத நிலைய அதிபர்களின் சங்கம் இந்த தீர்மானத்தினை மேற்கொள்ள காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment