Header Ads



மேவின் சில்வாவும் போட்டி, எப்போதும் ஆண்கள் பக்கமே இருப்பதாக தெரிவிப்பு

தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தின் கீழ் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த அவர் தற்போது ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை வெளியிட்டு வருகிறார்.

இந்தநிலையில் ரணில் எந்த தொகுதியில் போட்டியிடக்கூறுகிறாரோ அந்த தொகுதியில் தாம் போட்டியிடப்போவதாக மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தம்மை சந்திக்க வந்ததாக கூறப்படுவதை மறுத்த அவரிடம் வேட்பாளர் நியமனம் கிடைக்குமா? என்று கேட்டமைக்கு தம்மை வேட்பாளராக நியமித்தால் தாம் போட்டியிடப்போவதாக குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக்கட்சியில் எந்த பிரிவின் கீழ் போட்டியிடப்போகிறீர்கள் என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கு தாம் எப்போதும் ஆண்கள் பக்கமே இருப்பதாக மேர்வின் சில்வா தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.