Header Ads



தேவையற்ற பீதியை ஏற்படுத்திகொள்ள வேண்டாம் - பிரதமர் விசேட உரை

கொவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுப்படுவதற்கான சக்தியும் இயலுமையும் இலங்கையர்களுக்கு உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதனை தெரிவித்துள்ளார். 

வைரசை கட்டுப்படுத்த சுகாதார தரப்பினரும் அரசாங்கமும் விடுக்கும் அறிவித்தல்களை உரியவாறு கடைப்பிடிக்குமாறும் பிரதமர் மக்களை கேட்டுள்ளார். 

யுத்த காலத்தில் கூட நாடு முழுவதையும் ஒன்றிணைத்து ஊரடங்க சட்டம் அமுல்படுத்தவில்லை என கூறிய பிரதமர் ஒரு சிலரின் பொறுப்பற்ற நடவடிக்கையே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டமைக்கு காரணம் எனவும் கூறினார். 

கொரோனா வைரசை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை குறைவின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

எனவே தேவையற்ற பீதியை ஏற்படுத்தி கொள்ள வேண்டாம் எனவும், அரசாங்கம் கொரோனா தொடர்பான எந்த தகவலையும் மறைக்காது எனவும் தெரிவித்தார். 

இலங்கை பிரஜைகள் என்ற வகையில் இதற்கு முன்னர் பல சவால்களுக்கு முகம் கொடுத்து அவற்றை வெற்றிக்கொண்டுள்ளதாகவும் பிரதமர் நினைவுப்படுத்தினார். 

இலங்கையர்கள் என்ற வகையில் சகலரும் ஒன்று சேர்ந்து நாடு முகம் கொடுத்துள்ள நிலைமையை வெற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அதற்கான சக்தி இலங்கையர்களிடம் இருப்பதாக தான் நம்புவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.