Header Ads



கிண்ணியா பெண்ணுக்கு, கொரோனா தொற்று இல்லை

- ஹஸ்பர் ஏ ஹலீம் -

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேற்று (29)அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இன்று (30) வெளியிடப்பட்ட  மருத்துவ பரிசோதனையின் பின் குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லை என திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

 அரசாங்கத்தினால் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்ட திட்டங்களை கடைப் பிடித்து சட்டத்தை மதிக்குமாறும் பொது மக்களை கேட்டுக் கொள்வதுடன் சுகாதார துறை விடுக்கும் உள்ளிட்ட சகல விடயங்களையும் பொறுப்புடன் இருந்து செயற்படுவதனாலும் கொரோனா தொற்று நோயை ஒழிக்க முடியும் எனவும் தெரிவித்த அவர். மக்களின் விடயங்கள் தொடர்பிலும் கொரோனா ஒழிப்பு தொடர்பிலும் உரிய அரச திணைக்களங்கள் கடமைகளை செய்து வருவதுடன் பொது மக்களாகிய தங்களது ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்க்கிறோம் என மேலும் தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.