இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளி, குணமடைந்து இன்று வீடு திரும்பினார்!
கடந்த சில வாரங்களாக கொழும்பு அங்கொட IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று -23- வீடு திரும்பியுள்ளார்.
இத்தாலிய சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்பட்டவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் 86 நோயாளர்கள் தொடர்ந்தும் பல்வேறு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட நோயாளர்களில் மேலும் மூன்று நோயாளர்கள் பூரணமாக குணமடைந்த நிலையில், இருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக சுகாதாரதுறை பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment