Header Ads



உடன் அமுலுக்கு வந்தது,, கப்பல் பயணிகளுக்கு இலங்கையினுள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு

கொரோன வைரஸ் தொற்று அவதானம் காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் கப்பல் பயணிகளுக்கு இலங்கையினுள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

இன்று (03) காலை சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இன்றைய தினம் சொகுசு கப்பல் ஒன்று இலங்கைக்கு வர இருந்ததாக தெரிவித்தார். 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இன்று தொடக்கம் பயணிகள் கப்பல்களின் பயணிகளை தரையிறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. very good and best initiative,we hope tough and very strong law will also be in the airport for all the incoming passengers whether they come from coronavirus affected countries or not, all passengers should sticky be checked and correntined prior to allow them to get out of the airport.

    ReplyDelete

Powered by Blogger.