தேர்தலில் சஜின்வாஸ் போட்டி, நீதிபதி வழங்கிய உத்தரவு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளது இன்று நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.
30 கோடி ரூபாவுக்கும் மேலதிகமான தொகை பணச் சலவை செய்யப்பட்டதாக தொடரப்பட்டுள்ள வழக்கு சம்பந்தமாக சஜின் வாஸ் குணவர்தனவின் சட்டத்தரணி தாக்கல் செய்த மனுவை இன்று ஆராய்ந்த சந்தர்ப்பத்தில் இந்த விடயம் தெரிவந்தது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது தரப்பு வாதி, இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதால், அவர் வேட்குமனுவை கையளிக்க சந்தர்ப்பத்தை வழங்குமாறு சட்டத்தரணி கோரிக்கை விடுத்திருந்தார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டியெ இதற்கு அனுமதியை வழங்கியுள்ளார்.
எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் சஜின் வாஸ் குணவர்தன கூறும் இடத்திற்கு அழைத்துச் சென்று வேட்புமனுவில் கையெழுத்திட வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்குமாறு நீதிபதி, வெலிகடை சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இவரும் பெரிய ஐயாவுடன் மீண்டும் சேர்ந்து கொண்டால் அந்த ஒன்று குறைவான மூன்றில் இரண்டைப் பூர்த்தியாக்கலாம். அத்துடன் அந்த வழக்கு,இந்த வழக்கு என அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல மறைந்துவிடும். அதுதான் இப்போது இருக்கும் ஒரே தீர்வு!
ReplyDelete