ஜனாதிபதி செயலணியை உடனடியாக ஸ்தாபித்து, நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டும்
(ஆர்.விதுஷா)
கொவிட் 19 ( கொரோனா ) வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த உலக சுகதார ஸ்தாபனத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளை அரசாங்கம் உரிய முறையில் பின்பற்றவில்லை. இதன் காரணமாக நாட்டு மக்கள் அந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரமதாச தெரிவித்தார்.
கொரோனா வைரசின் தாக்கம் உலகளாவிய ரீதியில் பாரிய சுகாதார நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பியிருந்தேன். ஆயினும் அரசாங்கம் அதனை கேலிக்குரிய விடயமாகவே எடுத்துக்கொண்டது.
இந் நிலையில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையிலான ஜனாதிபதி செயலணியை உடனடியாக ஸ்தாபித்து இந்த சுகாதார நெருக்கடியை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Post a Comment