Header Ads



நீங்கள் பொது இடங்களுக்குச் செல்கிறீர்கள் என்றால், பொறுப்பற்ற சுயநலவாதியாக இருப்பீர்கள் - திசரா பெரேரா

உலகளவில் கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வலியுறுத்தி இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் திசரா பெரேரா வீடியோ வெளியிட்டுள்ளார்.

உலகின் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இதையடுத்து பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் என கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இலங்கை அணியின் திசரா பெரேரா டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், நீங்கள் இன்னும் பொது இடங்களுக்குச் செல்கிறீர்கள் என்றால், நீங்கள் பொறுப்பற்றவராகவும் சுயநலவாதியாகவும் இருப்பீர்கள் என்றே அர்த்தம்.

தயவு செய்து பொது இடங்களில் இருந்து விலகியே இருங்கள், இதோடு மற்றவர்களுடன் சிறிது தூரத்தில் நின்றே பேசுங்கள்.

மேலும் கைகளை கழுவுவதோடு, உங்கள் முகத்தை நீங்களே தொடாமல் இருங்கள். முக்கியமாக பீதியடையாமல் இருங்கள் என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.