Header Ads



அட்டுலுகமைக்கு சீல் வைப்பு, பாதுகாப்பும் தீவிரம் -


களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டுலுகம கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அண்மையில் துபாயிலிருந்து நாடு திரும்பியுள்ளார். குறித்த நபரை வீட்டில் தனிமையில் 14 நாட்கள் இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்த போதும் குறித்த நபர் தொடர்ந்தும் அசிரத்தையாகவே இருந்து வந்துள்ளார் மேலும் ஊரிலுள்ள பலரோடும் பொதுவாக பழகியும் இருக்கின்றார்.

நேற்று குறித்த இளைஞர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த பிரதேசத்தில் பதற்றம் நிலவி வருகின்றது. அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஏராளமானோருக்கு இத்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

இதன் காரணமாக குறித்த பிரதேசத்தில் இருந்து யாரும் வெளியேறக் கூடாது எனவும் குறித்த பிரதேசத்திற்குள் யாரும் நுழைய கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபருடன் நேரடியாக தொடர்புகளை கொண்டிருந்தவர்களை பாதுகாப்பு படை அடையாளப்படுத்தி வருகின்றனர். மேலும் அட்டுலுகம பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறியக் கிடைக்கிறது.

படங்கள் – லங்காதீப

4 comments:

  1. டாக்டர்களின் தவறால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தற்போது அட்டுலுகமயில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்ரன.அந்த நபருக்கு கோரோனா இல்லை என்ரும் ஆனால் பரிசோதனை அறிக்கை தவறு என பிந்திக் கிடைக்கும் தகவல்களாக இருக்கிறன.எனவே ஜப்னா முஸ்லிம் ஒரு முறை தீர விசாரித்து இப்போது அங்கிருந்து வரும் செய்திகளை பதிவிட முயற்ச்சி எடுக்க முடியும்.

    ReplyDelete
  2. கொரொணா இல்லாது போனமை அல்ஹம்து லில்லாஹ்...
    சந்தேகத்திற்கிடமான நபர் சந்தேகம் தீரும் வரை தனிமையைப் பேணி இருந்தால் இவ்வளவு சீரழிவு அவ்வூருக்கும் வைத்தியர்களுக்கும் பாதுகாப்புத் துறையினருக்கும் ஏற்பட்டிருக்காதே..சிந்நித்து நடக்க நம்மவர்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்!

    ReplyDelete
  3. கொரொணா இல்லாது போனமை அல்ஹம்து லில்லாஹ்...
    சந்தேகத்திற்கிடமான நபர் சந்தேகம் தீரும் வரை தனிமையைப் பேணி இருந்தால் இவ்வளவு சீரழிவு அவ்வூருக்கும் வைத்தியர்களுக்கும் பாதுகாப்புத் துறையினருக்கும் ஏற்பட்டிருக்காதே..சிந்நித்து நடக்க நம்மவர்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்!

    ReplyDelete
  4. குறித்த நபர் தனக்கு coronavirus இருப்பது தெரிந்தும் யாருக்கும் தெரிவிக்காமல் அனைவருடனும் சகஜமாக பழகி இருக்கின்றார். ஆனால் குறித்த வைத்தியரிடம் சென்று தனக்கு தடுமல் காய்ச்சல் இருப்பது என்று சொல்லித்தான் மருந்தும் எடுத்து இருக்கின்றார். இதில் வைத்தியர்களின் குற்றம் ஒன்றுமில்லை.நோய் முற்றியதால் காய்ச்சலுடன் வாந்தி வந்தபோதுதான் அவருடைய தந்தை குறித்த நபருக்கு தெரியாமல் police இல் மாட்டிக் கொடுத்துள்ளார்.

    ReplyDelete

Powered by Blogger.