Header Ads



புத்தளத்தில் மொட்டு கட்சி, வேட்பு மனு தாக்கல் - முஸ்லிம் ஒருவரும் உள்வாங்கப்பட்டு போட்டி


2020 பொதுத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன குழுவினர் இன்று (17) காலை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷந்த பெரேரா தலைமையிலான குழுவினரே, மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி சந்திரசிறி பண்டாரவிடம்,  வேட்பு மனுவை கையளித்துள்ளனர்.

இதற்கமைய, புத்தளம் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில், 11 பேர் போட்டியிடவுள்ளனர்.

இம்முறை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர் பட்டியலில், பெண் வேட்பாளர்கள் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்பது விசேட அம்சமாகும்.

அத்துடன், இந்த தேர்தலில் போட்டியிடும் 11 வேட்பாளர்களில் முஸ்லிம் ஒருவரும் உள்வாங்கப்பட்டுள்ளார்.

வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் தொகுதி அமைப்பாளருமான ஏ.எச்.எம்.ரியாஸ் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.