Header Ads



என் மீதான குற்றச்சாட்டுக்களை, உரியமுறையில் விசாரணை செய்க - ஜனாதிபதியிடம் ரிஷாட் கோரிக்கை

தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் வில்பத்து காடழிப்பு தொடர்பில் தன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணைக்குழு அமைத்தாவது உண்மைகளை வெளிப்படுத்துமாறு அவர் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.