Header Ads



இலங்கை பெண்ணின் நிலை கவலைக்கிடம் இல்லை, கணவருக்கு வைரஸ் தொற்று ஏற்படவில்லை

இத்தாலியில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள இலங்கை பெண்ணின் நிலை கவலைக்கிடமானதாக இல்லை என மிலான் நகரில் உள்ள இலங்கை தூதரக காரியாலயம் தெரிவித்துள்ளது.

குறித்த பெண்ணின் கணவருக்கு வைரஸ் தொற்று ஏற்படவில்லை என தூதரக காரியாலயத்தின் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 2 ஆயிரத்து 502 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.