Header Ads



இத்தாலியில் இன்று ஒரேநாளில் 919 பேர் மரணம்


இத்தாலியில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொடர்பான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று -27- 919 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இந்த வைரஸ் தொற்றினால் 86,498 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் இதுவரையில், 9,134 பேர் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக கடந்த 21ம் திகதி கொரோனா வைரஸ் தொற்றினால் அங்கு ஒரே நாளில் 793 பேர் உயிரிழந்தனர். இதுவே, ஒரு நாளில் இடம்பெற்ற அதிகமான உயிரிழப்பாக பதிவாகியிருந்தது.

இந்நிலையில், இன்று 919 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஆரம்பத்தில் சீனாவில் பெரும் அச்சுறுத்தலாக இருந்த கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.