குத்துச்சண்டை தகுதிகாண் போட்டிகளில் பங்கேற்ற 6 பேருக்கு கொரோனா
ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்பதற்கான தகுதியை பெற்றுக்கொள்வதற்கு லண்டனில் நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளில் பங்கேற்ற 6 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் துர்க்கி குத்துச்சண்டை வீரர்கள் இருவருக்கும் பயிற்சியாளருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளதாக துர்க்கிய குத்துச்சண்டை சம்மேளனம் தெரிவித்துள்ளது.
மேலும் குரேஷியா குத்துச்சண்டை வீரர் ஒருவருக்கும் பயிற்சியாளர் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment