Header Ads



வைரஸ் தாக்கிய இருவருடன் இருந்த 65 பேர் கண்டுபிடிப்பு - Dr அனில் ஜாசிங்க

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு இலக்காகியுள்ள இருவருடன் ​நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 65 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இவர்களில் 13பேர், ஏற்கெனவே வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

கொரோனா தாக்கத்துக்கு இலக்காகியிருந்த முதலாவது நபர் ​(சுற்றுலா வழிகாட்டி) நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களைக் கொண்டவர் என்பதோடு, நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர் என்றும், ஜாசிங்க தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.