Header Ads



ஒவ்வொரு நபரும் அதிகாலை 5 மணிக்கு எழ வேண்டும் - மைத்திரிபால அறிவுரை

நாடு ஒன்று அபிவிருத்தி அடைய வேண்டும் என்றால் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஊழல் மற்றும் மோசடியற்றவர்களாக இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். 

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

ஒவ்வொரு நபரும் குறைந்த பட்சம் அதிகாலை 5 மணிக்கு எழ வேண்டும். இரவு நேரத்துடன் நித்திரைக்கு சென்றதற்கு பரவாயில்லை. அதிகாலையில் எத்தனை பேர் எழுகின்றனர். 

எத்தனை பேர் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். எத்தனை பேர் உடற்பயிற்சி செய்கின்றனர். நோய்கள் அதிகரித்து வைத்தியசாலைகள் நிரம்பி வழிகின்றன. வைத்தியசாலைகளை எவ்வளவு பெரியதாக நிர்மாணித்தாலும், எத்தனை வைத்தியர்களை கொடுத்தாலும், புதிய இயந்திரங்களை வழங்கினாலும், நோய் நிலைமை குறைவடையவில்லை. நோய்கள் கட்டுப்படுத்தப்படவில்லை. இவற்றை வைத்தியர்களால் செய்ய முடியாது. அதனை தம்மால் மட்டுமே செய்ய முடியும். தமது உணவு பழக்க வழக்கங்கள், காலையில் நேரத்துடன் எழுத்திருப்பது, உடற்பயிற்சி செய்வது. இவற்றை உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் மக்கள் செய்கின்றனர் என்றார். 

6 comments:

  1. வாய்க்கு நல்லா வருது, சொல்லிட்டேன் என்றால் ஜப்னா முஸ்லிம்ட "சேவர்" நடுங்கும்.
    ஜோக்கர்ட கதையெல்லாம் ஒரு நியுஸா போடுரிங்களே. அவ்வவவு செய்தி பஞ்சத்துலயா இருக்கிரீங்க.

    ReplyDelete
  2. இவனின் கொசுத்தொல்லை தாங்க முடியல்ல.

    ReplyDelete
  3. This is what Islam says pray 5 times that is exercise for the whole body and get up early morning to pray Subah. Fasting is good for health.

    ReplyDelete
  4. (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.
    (அல்குர்ஆன் : 21:107)

    ReplyDelete
  5. இவர் காலை 5மணிக்கு எழும்பி என்ன செய்திருக்கின்றார். உயர் அதிகாரிகளை வைத்து கொமிசன் அடித்ததும் நாட்டின் அப்பாவி மக்களைக் கொலை செய்யப் பின்னணியில் இருந்ததும் நாட்டின் சட்டத்தை அவமதித்து கேவலப்படுத்தியதும்தான்.

    ReplyDelete
  6. இதற்கு கருத்து சொல்லலாம் ஆனால் நீங்கள் போட மாட்டிர்கள் மொட்டு கட்சியினர் இவனை போட்டு படுத்தும் பாடு போதும் ....................ரோஷமில்லாதவன் , காலையில் எழுந்து அடுத்தவனுக்கு குழி வெட்டத்தானோ

    ReplyDelete

Powered by Blogger.