Header Ads



யாழ்ப்பாணத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் - தாயும், சேய்களும் நலம்


போதனா வைத்தியசாலையில் கடந்த 2ஆம் திகதி தாயார் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகளும் நலமாக உள்ளனர் என்று வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி. ஜமுனானந்தா தெரிவித்தார்.

“தெல்லிப்பளை கட்டுவன் பகுதியைச் கிருஷ்ணபவன் கீர்த்திகா தம்பதிகளுக்கு நான்கு குழந்தைகள் கிடைக்கப்பெற்றனர். இரண்டு வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர்.கடந்த வருடம் கருவுற்றிருந்த கீர்த்திகா, கடந்த 2 ஆம் திகதி பிரசவ வலி காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அவருக்கு அன்றைய தினம் இரவு சுகப்பிரசவம் மூலம் நான்கு குழந்தைகள் கிடைக்கப்பெற்றனர். அதில் மூன்று ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் அடங்குகின்றனர்.

தற்போது குழந்தைகள் வைத்தியசாலையின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தாயும் சேயும் நலமாக உள்ளனர்” என்று போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ நிபுணர் சிவலிங்கம் ஜெயபாலன் தெரிவித்தார்.

“குழந்தைகள் தொடர்ந்தும் வைத்தியசாலை மருத்துவ நிபுணரின் கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் வெகு விரைவில் வீடு செல்லக்கூடிய நிலமை ஏற்படும். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 4 குழந்தைகள் ஒரு பிரசவத்தின் மூலம் பெறப்பட்ட இதுவே முதல் தடவையாகும்” என்று மருத்துவ நிபுணர் ஜெயபாலன் மகிழ்ச்சி வெளியிட்டார்.



1 comment:

Powered by Blogger.