Header Ads



4 மாத வயது குழந்தை உள்ளிட்ட, ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று

நேற்றைய தினம் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் 5 பேர் சிலாபத்தை சேர்ந்த ஒரே குடும்பைத்தை சேர்ந்தவர்கள் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். 

அவர்களில் 4 மாத வயதுடைய கைக்குழந்தை ஒன்றும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார் 

இதேவேளை, கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

இதேவேளை, இன்றைய தினம் மேலும் 3 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்தது. 

அதன்படி, 14 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

தற்போது , அங்கொடை ஐடிஎச், வெலிகந்த மற்றும் மின்னேரியா ஆகிய வைத்தியசாலைகளில் 107 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் நாட்டின் பல வைத்தியசாலைகளில் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் 104 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.