Header Ads



மரணத்தை எதிர்நோக்கியிருந்த 33 இலங்கை மாணவர்ககள் - ஜனாதிபதிக்கு அனுப்பிய நன்றிக் கடிதம்

வுஹான் நகரில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.

மரணத்தை எதிர்நோக்கியிருந்த 33 இலங்கை மாணவர்களையும் காப்பாற்றுவதற்காக ஜனாதிபதி எடுத்த தீர்மானம் தொடர்பில், நன்றி தெரிவிப்பதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வேறு நாடுகளில் இருந்து வருகை தரும் இலங்கையர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் போது, அவர்களால் முன்வைக்கப்படும் வேண்டுகோள்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் வருத்தமளிப்பதாக ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் மாணவர்கள் கூறியுள்ளனர்.

No comments

Powered by Blogger.