Header Ads



நிச்சயமாக சஜித் பிரதமராக தெரிவு செய்யப்படுவார், 2025 இல் ஜனாதிபதியாக பதவிக்கு கொண்டு வருவோம்

இம்முறை பொதுத் தேர்தலின் பின்னர் நிச்சயமாக சஜித் பிரேமதாச நாட்டின் பிரதமராக தெரிவு செய்யப்படுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரி கொட தெரிவித்துள்ளார்.

காலியில் இன்று -07- இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இது உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளும் நபர்களிடம் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்கும் தேர்தல். மிகவும் குறுகிய காலத்தில் சஜித் பிரேமதாசவை நாட்டின் பிரதமராக பதவிக்கு கொண்டு வந்து, 2025 ஆம் ஆண்டு நிச்சயமாக அவரை நாட்டின் ஜனாதிபதியாக பதவிக்கு கொண்டு வருவோம். ஐக்கிய மக்கள் சக்தி உண்மையான யானை.

யானை சின்னம் இம்முறை சஜித் பிரேமதாசவின் தோற்றத்தில் வருகிறது. எமது சின்னம் சஜித் பிரேமதாச எனவும் பந்துலால் பண்டாரிகொட குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. INDA KATCHIKKU OOTHAI VAALI
    CHINNAMTHAN PORUNDUM. IPPADITHAAN PESHAVENDUM. APPOLTHUTHAAN
    MUTTAALKALUM, THUVESHIKALUM, OOTHAIVAALIKKU VAAKKALIPPAARKAL.

    ReplyDelete

Powered by Blogger.