கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் 2 பேரின் நிலை கவலைக்கிடம் - 86 பேர் பாதிப்பு
நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸினால் 86 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள அங்கொடை தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திலும், வெளிக்கந்தை பொது மருத்துமனையிலும் சிகிச்சை பெற்றுவருவதாக தொற்று கொவிட் 19 தொற்றை தடுக்கும் தேசிய செயலணியின் பணிப்பாளர் இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிகிச்சை பெற்றுவரும் 74 பேரில் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், நாட்டில் உள்ள 45 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3 ஆயிரத்து 506 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களில் 31 வெளிநாட்டவர்களும் அடங்குவதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Post a Comment