181 பேர் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தில்
தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து இன்று (10) காலை வருகை தந்த 181 பேர் கொரோனா வைரஸ் தடுப்பு முகமான மட்டக்களப்பு தனியார் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
இவர்களுள் 179 இலங்கையர்கள் மற்றும் 2 தென்கொரிய நாட்டவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஈரான், இத்தாலி மற்றும் தென் கொரியா ஆகிய மூன்று நாடுகளில் இருந்து வருகை தருபவர்கள் இவ்வாறு இன்று முதல் கொரோனா வைரஸ் தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக விஷேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
Post a Comment