Header Ads



தொழுத போது பொலிஸ் முற்றுகை 17 பேர் கைது - பலர் தப்பியோட்டம் - கொரவப்பொத்தானயில் சம்பவம்

- அன்ஸிர் -

கொரவப்பொத்தான - கிவுள்கடயில் பள்ளிவாசலில் லுஹர் தொழுகை நடந்த வேளை, அப்பள்ளிவாசல் பொலிசாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை, 27 ஆம் திகதி இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

பொலிசார் முற்றுகையிடுகிறார்கள் என அறிந்ததும், அங்கிருந்து 50 க்கும் மேற்பட்டவர்கள் தப்பியோடியுள்ளனர்

எனினும் பொலிசார் 17 பேரை இதன்போது கைது செய்துள்ளனர்.

பள்ளிவாசலுக்கு வந்தவர்கள் தாம் அணிந்துவந்த பாதணிகளையும் கைவிட்டு ஓடியுள்ளனர்.

கைது செய்யபட்டவர்களிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

நாடளாவிய ரீதியில் தற்போது ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளமையும், வீடுகளிலேயே தொழுது கொள்ளும்படி ஜம்மியத்துல் உலமா ஏற்கனவே  அறிவுறுத்தல் விடுத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. ​தொப்பி தாடிகளுடன் வலம்வரும் மீஹரகா கூட்டம் என அழைக்கப்படுவது இந்த எருமைக்கூட்டங்கள் தான். அந்த எருமைகளுக்கு நாடும் சட்டமும் காலுக்குக்கீழ். இந்தக் கூட்டத்துக்கு இந்த நாட்டில் உள்ள சட்டத்தின் உச்சத் தண்டனையை நீதிமன்றம் வழங்க வேண்டும்.

    ReplyDelete
  2. நல்ல விடயம்.மாடுகள்

    ReplyDelete

Powered by Blogger.