முகக்கவசம் தயாரிப்பதற்காக தங்களை, தனிமைப்படுத்திக்கொண்ட 150 பெண்கள்
துனிசியாவில் தொழிற்சாலை ஊழியர்கள் 150 பேர், தொழிற்சாலையின் உள்ளே சென்று தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு முகக்கவசம் தயாரிப்பதற்கான பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள். முகக்கவசம் தயாரிப்பதற்காக தொழிற்சாலைக்குலேயே தங்களை ஒரு மாதத்திற்கு தனிமைப்படுத்திக் கொள்வதாக அவர்கள் கூறியுள்ளனர்.
வட ஆப்பிரிக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து மக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு இதுவரை 227 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு முகக்கவசம் செய்வதில் ஈடுபட்டுள்ள பெரும்பாலனவர்கள் கிராமபுரத்தை சேர்ந்தவர்கள்.
குறிப்பிடப்பட்டுள்ள தொழிற்சாலையில் 110 பெண்கள் தங்குவதற்கான படுக்கை வசதியும் 40 ஆண்கள் தங்குவதற்கான படுக்கை வசதியும் செய்யப்பட்டுஉள்ளது.
Post a Comment