Header Ads



14 கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு விஜயதாசவிடம் பொதுபலசேனா கோரிக்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவுக்கு கலகொட அத்தே ஞானசார தேரரின் பொதுபலசேனா அமைப்பு 14 நாட்களுக்குள் 14 கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு கோரியுள்ளது.

பொதுபலசேனா அமைப்புக்கு நோர்வேயில் இருந்து நிதியுதவி கிடைப்பதாக விஜயதாச ராஜபக்ச, உயிர்த்த ஞாயிறு தாக்குதலகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்திருந்தார்.

இதனை மறுத்துள்ள பொதுபலசேனா அமைப்பு பௌத்த தீவிரவாதத்தை தாம் ஒருபோதும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் நோர்வேயின் உதவியுடன் எந்தக்காலக்கட்டத்தில் பௌத்த தீவிரவாதம் முன்னெடுக்கப்பட்டது. நோர்வேயில் எப்போது பொதுபலசேனாவுக்கு நிதியும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன உட்பட்ட 14 கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு பொதுபலசேனா விஜயதாச ராஜபக்சவிடம் கேட்டுள்ளது.

இந்த 14 கேள்விகளுக்கும் 14 நாட்களுக்குள் பதில் வழங்குமாறு பொதுபலசேனா வலியுறுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.