Header Ads



இங்கிலாந்தில் நின்ற 148 இலங்கையர் இன்று நாடு திரும்பினர் - தனிமைப்படுத்தி பரிசோதனை

ஸ்ரீலங்கா வர முடியாமல் இங்கிலாந்தில் தங்கியிருந்த 148 பேர் இன்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திறங்கியதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்காவிற்கு உரித்தான யு எல் 504 எனும் விமானம் மூலம் லண்டன் நகரில் இருந்து நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த நபர்களை பரிசோதனைக்கு உற்படுத்துவதற்கு அழைத்து செல்லவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வந்திறங்கியவர்களை பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்தி அவர்களை பரிசோதனைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.