Header Ads



கொரோனா தொற்று - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு


கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் ஒருவர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

குணமடைந்தவர் தற்போது வைத்தியசாலையில் இருந்து வௌியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதன்படி, இதுவரை 10 பேர் இந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 

இதுவரை நாட்டில் 115 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் அவர்களில் இதுவரை 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.