Header Ads



கட்டுகஸ்தோட்டயில் 10 வயது பிள்ளையை கடத்த முயன்ற பங்களாதேஷ் நாட்டவர் 4 பேர் கைது

கண்டி கட்டுகஸ்தோட்ட பிரதேசத்தில் 10 வயதுடைய பிள்ளையை கடத்த முயன்ற வெளிநாட்டவர்கள் நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுகஸ்தோட்ட, மெனிக்கும்புர பகுதியிலுள்ள வாரந்த சந்தைக்கு அருகில் இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த பிள்ளை தனது சித்தப்பாவுடன் சந்தைக்கு சென்றுள்ளார். இதன் போது திடீரென வாகனத்தில் வந்தவர்கள் பிள்ளையை கடத்த முயற்சித்துள்ளனர்.

அந்த சந்தர்ப்பத்தில் பிள்ளையின் சித்தப்பா போராடி காப்பாற்றியதுடன் கட்டுகஸ்தோட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இவ்வாறு கடத்த வந்தவர்களின் வாகனத்தின் இலக்கத்தை சித்தப்பா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வாகனத்தில் பங்களாதேஷ் நாட்டவர்களே இருந்துள்ளனர். சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 comment:

  1. பங்களாதேஷில் பெண்பிள்ளைகளைக் கடத்தி பலர் சேர்ந்து கற்பழிப்புக் கேவலங்களில் ஈடுபடும் காமவெறியர்களைச் இந்த நாட்டுச் சட்டம் சரியாக அமல்நடாத்து அந்த நாய்களை சமூகத்திலிருந்து ஒழிக்கப்பட வேண்டும். இது போன்ற பாவச் செயல்கள் நாட்டில் நடைபெறாத வகையில் சட்டம் அந்த காவிகளைத் தண்டிக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.